PAGEVIEWERS


அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறை கேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பல்கலை கழகத்தை நிர்வகிக்க அங்கு அரசு நிர்வாக அதிகாரியாக ஷிவதாஸ் நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பல்கலை கழகத்தை அரசே ஏற்று நடத்த சட்டசபை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைகழக பதிவாளர் மீனாட்சி சுந்தரம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு 58 ஓய்வு வயது ஆகிவிட்டதால் அவர் பதிவாளர் பதிவியிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி ஷிவதாஸ் மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் புதிய பதிவாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனாட்சி சுந்தரம் ஏற்கனவே பொருளாதார துறையில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவர் அந்த துறைக்கு மீண்டும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment