PAGEVIEWERS


சட்டசபையின் 18-வது சபாநாயகராக தனபால் பதவியேற்பு: துணை சபாநாயகர் வேட்பாளர் அறிவிப்பு
Press Release

தமிழக சட்டசபையின் 18-வது சபாநாயகராக அ.தி.மு.க.சார்பில் தனபால் போட்டியின்றி இன்று தேர்வானார். இன்று நடந்த விழாவில் அவர் பதவியேற்று கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சித்துணைத்தலைவர், அவை முன்னவர் உள்ளிட்டோர் அவரை வாழ்த்தினர். இதையடுத்து துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டார். 


தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த ஜெயக்குமார், கடந்த மாதம், 29ம் தேதி, ராஜினாமா செய்தார். இதையடுத்து, துணை சபாநாயகரான தனபால், சபாநாயகருக்கான பணிகளை கவனித்து வந்தார். முன்னதாக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக, இந்திய குடியரசு கட்சித் தலைவர், செ.கு.தமிழரசன் நியமிக்கப்பட்டார்.. இதுகுறித்த அறிவிப்பை, சட்டசபை செயலர் வெளியிட்ட நிலையில், தமிழரசன் நேற்று பொறுப்பேற்றார்.


சபை மரபுபடி அமர வைக்கப்பட்டார்


இதையடுத்து ஏற்கனவே துணை சபாநாயகராக இருந்த தனபால், ஆளுங்கட்சி சார்பில், சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர், இரு தினங்களுக்கு முன், சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூடியது. இதில் சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் யாரும் போட்டியிடவில்லை என்பதால் தனபால் போட்டியின்றி சபாநாயகராக ‌தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் சட்டசபை எதிர்க்கட்சித்துணைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், உள்ளிட்டோர் அவரை சபை மரபுப்படி சபநாயகர் இருக்கைக்கு அழைத்துச்சென்று அமர வைத்தனர். இதைத்தொடர்ந்து சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் அவரை வாழ்த்தினர்.

முதல்வர் காலில் விழுந்து ஆசி



சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தனபால் பதவியேற்பதற்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். பின்னர் தம்மை சபாநாயகராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனபாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

சட்டசபை வைர விழா, இம்மாதம், 29ம் தேதி நடக்கவிருந்தது, தற்போது நவம்பர் 30-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. புதிய சபாநாயகரை, உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் சபாநாயகர் தேர்தல் நடந்தது. 
துணை சபாநாயகர் பதவிக்கும் போட்டி இருக்காது என்பதால், ஆளுங்கட்சி அறிவிக்கும் வேட்பாளரே, துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டசபை அலுவல் கூட்டமும் இன்று நடக்கிறது. 

துணைசபாநாயகர் தேர்தல் வரும் 29-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு வரும் 26 தேதி மதியம் 12 மணி வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது., துணை சபாநாயகர் துணைத்தேர்தலையொட்டி வைரவிழா நவம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டசபை நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழா வரும் 26-ம் தேதி நடக்கிறது. 


அமளி ஏற்பட்டால் கண்டிப்பது சபாநாயகரின் கடமை: ஜெ.
சட்டசபை புதிய சபாநாயகர் தனபாலை வாழத்தி முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் செயல்பாடும் இருக்க வேண்டும். திட்டமிட்டு அமளி ஏற்படுத்துவதை யாரும் ஏற்கமாட்டார்கள். அமளி ஏற்பட்டால் எம்.எல்.ஏ.க்களிடம் கண்டிப்பு காட்டுவது சபாநாயகரின் கடமை.இவ்வாறு ஜெ. பேசினார்.

துணை சபாநாயகராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்
இதற்கிடையே இன்று மாலை துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டார். இவர் முன்னர் ஜெ. அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

No comments:

Post a Comment