PAGEVIEWERS

திருநெல்வேலி : போலீஸ் சங்கம் அமைக்க முயன்றது உட்பட பல்வேறு புகார்களில் சிக்கிய ஏட்டு அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். நெல்லை சிறுவர் பாதுகாப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் சங்கர சுப்பிரமணியன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னீர்பள்ளம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போது இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருந்தது. உயர் அதிகாரிகள் விசாரணை செய்த போது அதை டேப் செய்தது. போலீசுக்கு என தனியாக சங்கம் அமைக்க முயற்சி செய்தது என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது. இதுதொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். கோர்ட் உத்தரவுப்படி மீண்டும் பணியில் சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சங்கர சுப்பிரமணியன் சிறுவர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறியது உட்பட பல்வேறு புகார்கள் இவர் மீது மீண்டும் கூறப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் ஏட்டு சங்கரசுப்பிரமணியன் நேற்று அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment