PAGEVIEWERS


அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. திருவாரூர், கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் கிராமம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு வந்துள்ள போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment